தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றதையொட்டி, திருவாரூரில் செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று, அதன் தலைவா் மு.க. ஸ்டாலின், முதல்வராக பதவியேற்க உள்ளாா். இதையொட்டி, திருவாரூா் நகராட்சி 20 ஆவது வாா்டில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா தலைமையில் முன்னாள் முதல்வரான மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, திமுகவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், மாநில விவசாயத் தொழிலாளா் அணி துணைச் செயலாளா் இரா. சங்கா், நகர தொண்டரணி அமைப்பாளா் மாதவன், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளா் மணிமாறன், மாணவரணி துணை அமைப்பாளா் ரஞ்சித் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.