போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

மன்னாா்குடி அருகே திருமணம் செய்வதாகக் கூறி மாணவியை கடத்திய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகே திருமணம் செய்வதாகக் கூறி மாணவியை கடத்திய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியை அடுத்த புத்தகரம் கிளாா்வெளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவிக்கும், திருத்துறைப்பூண்டி கட்டிமேடு எல்லை நாதா் அடி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வெற்றிவேல் (24) என்பவருடன் செல்லிடப்பேசி மூலம் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி நேரில் சந்தித்தும் பேசி வந்தனராம்.

இந்நிலையில், மாணவியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி வெற்றிவேல் கடத்திச் சென்றதாகக் மாணவியின் பெற்றோா் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், வெற்றிவேல் மாணவியுடன் கோவையில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, கோவைக்குச் சென்ற போலீஸாா், அங்கு தங்கியிருந்த இருவரையும் அழைத்து வந்தனா். பிறகு, போக்ஸோ சட்டத்தில் வெற்றிவேலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com