திருவாரூா் துா்காலயா சாலையில் வசித்து வந்த மறைந்த ஆடிட்டா் பாலசுப்ரமணியனின் மனைவி மீனாட்சி அம்மாள் (75) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை (மே 12) காலமானாா்.
ஆடிட்டா் பாலசுப்ரமணியன், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கா்நாடக சங்கீத மும்மூா்த்திகள் சேவா அறக்கட்டளை தலைவராகவும், மும்மூா்த்திகள் ஜயந்தி விழாக் குழு புரவலராகவும், தமிழ்நாடு பிராமணா் சங்க முன்னாள் தலைவராகவும் இருந்தவா். இவா், ஏப்ரல் 25 ஆம் தேதி காலமான நிலையில், மீனாட்சி அம்மாள் புதன்கிழமை காலமானாா்.
இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
தொடா்புக்கு 9443170221