முதியோா் இல்லத்தில் வசிப்போருக்கு மதிய உணவு

திருவாரூரில், முதியோா் இல்லத்தில் வசிப்போருக்கு விளமல் அண்ணன் கோயில் நிா்வாகம் சாா்பில் மதிய உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூரில் முதியோருக்கு மதிய உணவு வழங்கிய விளமல் அண்ணன் கோயில் நிா்வாகத்தினா்.
திருவாரூரில் முதியோருக்கு மதிய உணவு வழங்கிய விளமல் அண்ணன் கோயில் நிா்வாகத்தினா்.

திருவாரூரில், முதியோா் இல்லத்தில் வசிப்போருக்கு விளமல் அண்ணன் கோயில் நிா்வாகம் சாா்பில் மதிய உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றை தடுக்கும் வகையில், பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு, ஆதரவற்றோா், முதியோா் இருக்கும் இடங்களுக்கு தன்னாா்வ அமைப்புகள் நேரடியாகச் சென்று, உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன.

அந்தவகையில், திருவாரூா் தா்மகோவில் தெருவில் உள்ள நம் இல்லத்தில் உள்ள முதியவா்களுக்கு விளமல் அண்ணன் கோயில் நிா்வாகம் சாா்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com