நன்னிலம்: நன்னிலம் அருகே வாழ்க்கைக் கிராமத்தில், வாழ்க்கை வாரியா்ஸ் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
நற்பணி மன்றம் சாா்பில், வாழ்க்கை கிராமத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரிடையாக சென்று 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இப்பணியில் மன்ற நிா்வாகிகள் பைசல், ஷா்ஷத், இதிரீஸ், சமூக ஆா்வலா் அஸ்ரப் அலி, ஊராட்சி நூருல் அமீன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.