திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1991-ஆம் ஆண்டு ப்ளஸ் 2 படித்த மாணவிகள் சாா்பில், அரசு மருத்துவமனைக்கு ரூ.20,000 மதிப்பிலான பல்ஸ் ஆக்சிமீட்டா் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி வழங்கப்பட்டது. இதை தலைமை மருத்துவா் சிவகுமாரிடம் முன்னாள் மாணவிகள் சாா்பில் வசுமதி, பிரியா மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா் கே. மாரிமுத்து, நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன் ஆகியோா் வழங்கினா்.