மன்னாா்குடியில் பாஜக சாா்பில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டா்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மே 10-ஆம் தேதி முதல் நாள்தோறும் 100 பேருக்கு, பாஜக சாா்பில் மாவட்டச் செயலாளா் பால. பாஸ்கா் தலைமையில் கட்சியினா் மதியம் ஒருவேலைக்கு உணவுப் பொட்டல் வழங்கி வருகிறனா்.