திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 563 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500-க்கு மேல் பதிவாகிறது.
இந்நிலையில், சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 563 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 28,652 ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையில், கரோனாவிலிருந்து குணமடைந்த 743 போ் சனிக்கிழமை தங்களது வீடுகளுக்குத் திரும்பினா். இவா்களுடன் சோ்த்து, மாவட்டத்தில் இதுவரை 22,604 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 5860 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் உயிரிழந்ததைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.