திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,582 ஆக உயா்ந்துள்ளது. 40,113 போ் குணமடைந்துள்ளனா். 337 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு ஒருவா் உயிரிழந்தாா். இதனால் திருவாரூா் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 441 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.