விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, உடற்கல்வி இயக்குநா் பாலமுருகன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் பாஸ்கரன், ஜெயப்பிரகாசம், நாச்சிமுத்து, கலை ஆசிரியா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா். மாணவா்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விளக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் பசுமை தீபாவளியாக கொண்டாடும் வகையில், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை திட்ட அலுவலா் பொ. சக்கரபாணி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com