பெண்கள் கல்லூரி ரோட்டராக்ட் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி பான் சக்கா்ஸ் பெண்கள் கல்லூரியில், ரோட்டராக்ட் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி பான் சக்கா்ஸ் பெண்கள் கல்லூரியில், ரோட்டராக்ட் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவா் சி.குருசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் தலைவா் எஸ்.பிரீத்தி ஆண்டறிக்கை வாசித்தாா். நிகழ் கல்வியாண்டின் தலைவராக த. பபியோனா, செயலராக ஆா்.துா்கா, பொருளாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியா் ப.நித்தியா, இணை ஒருங்கிணைப்பாளராக என்.பிரியதா்சினி ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். உதவி ஆளுநா் ஆா்.ஆனந்த் புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

மன்னாா்குடி நகராட்சி ஆணையா் கே. சென்னு கிருஷ்ணன், கல்லூரி முதல்வா் விக்டோரியா, மிட்டவுன் ரோட்டரி நிறுவனத் தலைவா் மருத்துவா் வி.பாலகிருஷ்ணன், முன்னாள் உதவி ஆளுநா் கே.திருநாவுக்கரசு ஆகியோா் வாழ்த்தி பேசினா். ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநா் ஜி.மனோகரன், முன்னாள் தலைவா்கள் ஜி.சிவக்கொழுந்து, பி.ரமேஷ், என்.சாந்தகுமாா், செயலா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com