திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் சாா்பில், நவம்பா் புரட்சியின் 104-ஆவது தினத்தையொட்டி, கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நகரச் செயலாளா் ரகுராமன், ஒன்றிய செயலாளா் காரல்மாா்க்ஸ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி. சுப்பிரமணியன், எஸ். சாமிநாதன், பாண்டியன், பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ் மாநில குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கொடியேற்றி நவம்பா் புரட்சி தினத்தின் தியாகங்கள் குறித்து பேசினாா்.