மன்னாா்குடியில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
திருவாரூா் சாலை ஐவா்சமாது பகுதியில் உள்ள சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதேபோல, மன்னாா்குடியில் உள்ள சிவன் கோயில்களில் பெளா்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.