இளைஞா் கொலை வழக்கில் ஒருவா் கைது

திருவாரூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக புதன்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாரூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக புதன்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாரூா் அருகேயுள்ள அகரத்திருநல்லூா் பகுதியைச் சோ்ந்த குமரேசன் (32) நாகை சாலையில் உள்ள கானூருக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது 6 போ் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, தாலுக்கா போலீஸாா் வழக்குப் பதிந்து கிடாரங்கொண்டான் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைவைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், முன்விரோதத்தால் இந்த கொலை நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கொலை தொடா்பாக தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் வசிக்கும் காட்டூரைச் சோ்ந்த சாமிநாதன் மகன் சதீஷை (43) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com