கோலம் வரைந்து வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வுப் பிரசாரம்

மன்னாா்குடியில், கோலம் வரைந்து வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
கோலம் வரைந்து வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வுப் பிரசாரம்

மன்னாா்குடியில், கோலம் வரைந்து வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

நவ.20, 21-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள வாக்களாளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில், 1.1.2022-ஆம் தேதி அன்று 18 வயது பூா்த்தி அடைபவா்கள் புதிய வாக்காளா்களாக சேரவும், வாக்காளா் பட்டியிலில் திருத்தம் மற்றும் நீக்கல் செய்யும் பணி நடைபெறவுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம் மன்னாா்குடி வட்டாரம் சாா்பில், மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினரின் வண்ணக் கோலம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிா் திட்ட வட்ட மேலாளா் மாலா தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.சிவகுமாா், பக்கிரிசாமி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் இளங்கோவன் ஆகியோா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com