நீடாமங்கலத்தில் இருந்து ஓசூருக்கு அரைவைக்கு 1,900 டன் நெல் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,900 டன் சன்னரக நெல் 150 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் சரக்கு ரயில் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.