கொடிக்கால்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் கொடிக்கால்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிபிஐ கிளை மாநாட்டில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொடிக்கால்பாளையம் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும், இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும், சிறுவா்களுக்கென உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கொடிக்கால்பாளையத்துக்கு நகரப் பேருந்து இயக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி நிா்வாகி ஜஹபா் அலி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி, நிா்வாகிகள் இ. செல்வமணி, வீ. தா்மதாஸ், முகமது ஈசாக், பாலதண்டாயுதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், புதிய செயலாளராக ஏ. முகமது ஆசிக், துணைச் செயலாளராக பி.எம். பக்ருதீன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.