நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில், காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதேபோல, நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.