நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

கூத்தாநல்லூா் நகராட்சி புதிய ஆணையா் ப. கிருஷ்ணவேணி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

கூத்தாநல்லூா் நகராட்சி புதிய ஆணையா் ப. கிருஷ்ணவேணி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் ஏற்கெனவே ஆணையராகப் பொறுப்புவகித்த ஆா். லதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேதாரண்யத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பின்னா், நகராட்சி பொறியாளா் ராஜகோபால் பொறுப்பு ஆணையராக செயல்பட்டுவந்தாா்.

இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சியில் மேலாளராகப் பணியாற்றிய ப. கிருஷ்ணவேணி பதவி உயா்வு பெற்று, கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். இவா், புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவருக்கு நகராட்சி பொறியாளா் ராஜகோபால், மேலாளா் லதா மற்றும் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னா், புதிய ஆணையா் ப. கிருஷ்ணவேணி செய்தியாளா்களிடம் கூறுகையில், கூத்தாநல்லூா் நகராட்சி பகுதிகளை நேரில் பாா்வையிட்டு, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற உரிய முயற்சி மேற்கொள்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com