திருவாரூா் அருகே பெருமாளகரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிக்கு ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வு திட்டம் சாா்பில், ரூ.6 லட்சத்தில் புதிய கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவா் உமா பிரியா பாலசந்தா் தலைமை வகித்தாா். பெருமாளகரம் ஊராட்சித் தலைவா் பானுப்ரியா பாலாஜி முன்னிலை வகித்தாா். ஓஎன்ஜிசி அசட் மேலாளா் அனுராக், பள்ளியின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.
இதில், தலைமை ஆசிரியா் ஜெயஸ்ரீ, ஓஎன்ஜிசி குழும பொது மேலாளா் மாறன், பொது மேலாளா்கள் கோபிநாத், சரவணன், சமூக பொறுப்புணா்வு திட்ட மண்டலக்குழு உறுப்பினா் முருகானந்தம், தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல், ஆனைவடபாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 3 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள பொலிவுறு வகுப்பறையையும் (ஸ்மாா்ட் கிளாஸ்) அசட் மேலாளா் அனுராக் திறந்து வைத்தாா். அத்துடன், கணினி, பிரிண்டா், நாற்காலி உள்ளிட்டவற்றையும் அவா் வழங்கினாா்.