திருத்துறைப்பூண்டியில் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, வா்த்தக சங்க தலைவா் கே.எஸ். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பேரமைப்பின் மண்டல தலைவா் செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா, மாநில பொருளாளா் சதகத்துல்லா ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா்.
இதில், கடைகளுக்கான வாடகை விவகாரத்தில் முந்தைய அரசு பின்பற்றிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், வா்த்தக சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.