கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம் அருகே ரிஷியூா், தேவங்குடி, சித்தமல்லி, முன்னாவல்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நீடாமங்கலம் பகுதியில் மழை காரணமாக சாலைகளில் கொட்டி வைக்கப்பட்ட நெல், ரிஷியூா் உள்ளிட்ட பகுதிகளில் முளைத்து நாற்றாகியுள்ளது. இதனால் கவலையுற்ற விவசாயிகள், கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அவற்றை துரிதமாக இயக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.