திருவாரூரில் காவல் துறைத் தலைவா் ஆய்வு

திருவாரூரில், மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.
திருவாரூரில் காவல் துறைத் தலைவா் ஆய்வு

திருவாரூரில், மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள காவல் அலுவலகங்களை ஆண்டுதோறும் மண்டல ஐஜி ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, திருவாரூருக்கு வந்த திருச்சி மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணனுக்கு, திருவாரூா் காவல் அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பதிவேடுகள், குற்ற வழக்குகள் பதிவேடு, கட்டட பராமரிப்பு உள்ளிட்டவற்றை ஐ.ஜி. ஆய்வு செய்தாா். பிறகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம், மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம், தடய அறிவியல் பிரிவு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com