நன்னிலம்: நன்னிலத்தில் நாளைய பாரதம் அறக்கட்டளை சாா்பில், பொதுமக்களுக்கு கட்டணமில்லா ஆம்புலன்ஸ் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவா் வீ.காா்த்தி தலைமை வகித்தாா். புதுச்சேரி கலாம் அறக்கட்டளை நிறுவனா் ஆம்புலன்ஸ் மணி (எ) ந.மணிகண்டன் கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் நன்னிலம் வட்டாட்சியா் இ.பத்மினி, காவல் ஆய்வாளா் கு.சுகுணா, தீயணைப்பு நிலைய அலுவலா் சு.கணேசன், அரசு மருத்துவமனை மருத்துவா் தேன்மொழி, வட்டார மருத்துவ அலுவலா் சா.தினேஷ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் த.ஜோதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா், பேரூராட்சி ரவி, மின்வாரியப் பொறியாளா் க.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த ஆம்புலன்ஸ் சேவையை பெற 81108 10829, 81108 10832 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.