அகவிலைப்படி முடக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
2020 ஜனவரி முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படியை உடனே வழங்கவேண்டும், மாசில்லாத மருத்துவம் எனும் அடிப்படையில் புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் கரோனா கால ஓய்வூதியா்களின் மருத்துவப் பட்டியல்கள் மற்றும் ஊழியா்கள் அவ்வப்போது தரும் பட்டியல்களின் மீது உடனடியாக தொகையை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.