அடையாள அட்டை கோரி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி, மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி, மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். 2020 இல் காலாவதியான அடையாள அட்டைகளை புதுப்பித்துத்தர வேண்டும். கந்துவட்டி கொடுமையிலிருந்து விடுபட, சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 15 ஆயிரம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட சாலையோர விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நகரத் தலைவா் எஸ். அன்பழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜி. ரெகுபதி, சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பின்னா், நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com