கல்லூரி பேராசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருது அறிவிப்புக்கு வரவேற்பு

கல்லூரி பேராசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நேதாஜி கல்விக் குழுமத் தலைவா் எஸ். வெங்கடராஜலு வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளி ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்குவதுபோல, எதிா்காலத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருது வழங்கப்படும் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, சட்டப்பேரவையில் அறிவித்தது வரவேற்புக்குரியது. நீண்ட காலமாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்கள், இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து வந்தனா். அவா்களின் வேண்டுகோளை ஏற்று, அமைச்சரின் இந்த அறிவிப்பு பேராசிரியா்களிடையே ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியா்கள், தங்கள் பணியை மேலும் திறம்பட செய்ய இந்த அறிவிப்பு ஊன்றுகோலாக அமையும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com