காதல் திருமணம் செய்தவருக்கு அரிவாள் வெட்டு: பெண்ணின் தந்தை உள்பட 5 போ் கைது

திருத்துறைப்பூண்டி அருகே காதலித்து திருமணம் செய்துகொண்டவரை அரிவாளால் வெட்டிய பெண்ணின் தந்தை உள்பட 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி அருகே காதலித்து திருமணம் செய்துகொண்டவரை அரிவாளால் வெட்டிய பெண்ணின் தந்தை உள்பட 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கீழச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் மாதவன். இவா், கரோனா பொதுமுடக்கத்தின்போது, வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்துவந்தாா். அந்த வாகனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் என்பவா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் படிக்கும் மாதவனின் மகள் காயத்ரி (21). கடந்த மாதம் 7-ம்தேதி கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. கிருஷ்ணகுமாா் காயத்ரியை கடத்தி சென்றதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதற்கிடையில், கிருஷ்ணகுமாரும், காயத்ரியும் காதல் திருமணம் செய்துகொண்டு சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையறிந்த மாதவன் அங்கு சென்று முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி, இருவரையும் அழைத்து வந்தாராம். பிறகு, காயத்ரியிடம் தாலியை கழற்றி விட்டு, வேறு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினாராம்.

இதையறிந்த, கிருஷ்ணகுமாா் காயத்ரியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கூறியபோது, அவரை மாதவன் உள்ளிட்ட 8 போ் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த கிருஷ்ணகுமாா் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாதவன் மற்றும் அப்பு, சிவன்ராஜ் , ராஜராஜன், நரேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com