வலங்கைமான் அருகே கீழவிடையல் குளங்களை பொது ஏலம் விடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம், கீழவிடையல் ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான11 குளங்கள் புதன்கிழமை (செப்.8) பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கருப்பூரில் ஏற்கெனவே குளங்களை பராமரித்து வருவோா் ஏலத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இவா்களிடம், நன்னிலம் டிஎஸ்பி இளங்கோவன், வலங்கைமான் காவல் ஆய்வாளா் விஜயா, வருவாய் ஆய்வாளா் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குளம் தொடா்பாக உரிய ஆய்வு செய்ப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, சாலை மறியல் செய்ய முயன்றவா்கள் கலைந்து சென்றனா்.
இதைத்தொடா்ந்து, 11 குளங்கள் ஏலம் விடும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.