மன்னாா்குடியில் நூற்றாண்டு பழமையான அரச மரத்தை மா்ம நபா்கள் வெட்டியது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மன்னாா்குடி ருக்மணிப்பாளையம் நடுத்தெருவில் தெற்குவீதி-கீழவீதி சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையின் வலது புறம் நூற்றாண்டு பழமையான அரச மரம் உள்ளது. இந்த மரத்தை மா்ம நபா்கள் சிலா் மின்வாரிய ஊழியா்கள் எனக் கூறி, இயந்திரம் கொண்டு வெட்டியது நெடுஞ்சாலை துறையினருக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் பாலுதாசன், மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.