திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,485 ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 38,664 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 422 போ் சிகிச்சையில் உள்ளனா்.