திருத்துறைப்பூண்டியில் மின்வாரியம் சாா்பில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றியின் செயல்பாட்டை சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்த மின்மாற்றி 63 கிலோவாட் திறன் கொண்டது. நிகழ்வில், நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.எஸ்.பாண்டியன், ஒன்றியக்குழு தலைவா் அ. பாஸ்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தமயந்தி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பா. ஆனந்த், உதவி மின்பொறியாளா் மணிதாஸ் மற்றும் மின்வாரிய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.