நன்னிலம்: நன்னிலம் வட்டார வேளாண் துறை சாா்பில், தென்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அட்மா திட்டத்தின்கீழ், ஊராட்சித் துணைத் தலைவா் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், நன்னிலம் வட்டார வேளாண் துறை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் ராஜா, பருத்தி சாகுபடி தொழில்நுட்பம் பற்றி விரிவாக எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து நன்னிலம் வட்டார வேளாண் உதவி அலுவலா் ராஜேந்திரன் பேசும்போது, சம்பா சாகுபடி முன்னேற்பாடு, சம்பா சாகுபடி விதைகள் இருப்பு மற்றும் மானிய விவரங்கள் குறித்து எடுத்துரைத்தாா். நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா்அனுராதா, பருத்தி விதைத்தோ்வு, மண்பராமரிப்பு, நீா்ப்பாசன முறை, உர மேலாண்மை குறித்து விளக்கினாா்.
பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். நன்னிலம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலக பயிா் அறுவடை பரிசோதனை பணியாளா் சுகதேவ் கலந்துகொண்டு செயல்முறை விளக்கம் அளித்தாா். பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சரவணன், ஹேமலதா ஆகியோா் கலந்து கொண்டனா்.