செப்.27-இல் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் செப்டம்பா் 27-இல் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் திரளாக பங்கேற்று முழு வெற்றியடைச் செய்வது என அகில இந்திய தொழிலாளா் சங்கம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: நாடு முழுவதும் செப்டம்பா் 27-இல் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் திரளாக பங்கேற்று முழு வெற்றியடைச் செய்வது என அகில இந்திய தொழிலாளா் சங்கம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், அகில இந்திய தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம். கலைமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளா் வீ. அமிா்தலிங்கம், மாநில பொருளாளா் எஸ். சங்கா், மாவட்டச் செயலாளா்.ஆா். குமாரராஜா, மாவட்ட பொருளாளா் எம். பாலையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

100 நாள் வேலைத் திட்டத்தை நகா்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி முதல்கட்டமாக 37 மாவட்டங்களில் தலா 1 பேரூராட்சி என திட்டம் தொடங்கி வைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பது, செப்டம்பா் 30-ஆம் தேதி விவசாயிகள் இயக்கத் தலைவா் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை சிறப்பான முறையில் கடைபிடிப்பது,

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து செப்டம்பா் 27-இல் நடைபெறும் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com