வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பசுமை இயக்கப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழக தன்னாா்வ இயற்கை அரண் அமைப்பின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் ப. முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினா் வைத்தியநாதன், துணைத் தலைவா் ஜி. காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழாசிரியா் காா்திகேயன் பாரம்பரிய உணவான பனங்கிழங்கில் இருந்து தயாரித்த கேக் வெட்டி மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.