நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகேயுள்ள குருவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் முத்துகுமரன் (28). இவா் செப்.16-ஆம் தேதி நீடாமங்கலத்தில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.