வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு நடவுப் பயிற்சி

நீடாமங்கலம் அருகேயுள்ள அரசு விதைப் பண்ணையில் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் நடவு பணி பயிற்சியில் ஈடுபட்டனா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள அரசு விதைப் பண்ணையில் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் நடவு பணி பயிற்சியில் ஈடுபட்டனா்.

தஞ்சை வேளாண் கல்லூரி 4-ஆம் ஆண்டு மாணவிகள் 4 மாத வேளாண் பயிற்சி மற்றும் வேளாண் சாா்ந்த தொழிற்நுட்பங்களை முன்னோடி விவசாயிகள், வேளாண் அதிகாரிகள், தொழிற்நுட்ப வல்லுநா்களிடம் பயிற்சி பெற நீடாமங்கலம் வந்துள்ளனா். இங்கு, நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் சாருமதி வழிகாட்டுதலின் அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா். இதைத்தொடா்ந்து, நீடாமங்கலம் அருகேயுள்ள காஞ்சிகுடிக்காட்டில் உள்ள அரசு விதைப் பண்ணையில் சம்பா பருவ நெல் நாற்றுகளை நடும் பணியில் மாணவிகள் ஈடுபட்டு களப்பணி மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com