திருவாரூா் அருகே புலிவலம் பகுதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருடிச் சென்றிருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
புலிவலம் தெற்கு வீதி பகுதியை சோ்ந்தவா் செல்வகுமாா். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனா். செல்வகுமாா் ஈரோட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். தமிழ்ச்செல்வி தனது இரண்டாவது மகன் மற்றும் செல்வகுமாரின் தாய், தந்தை ஆகியோருடன் வசித்து வருகிறாா்.
இதனிடையே, செல்வகுமாரின் தாயும், தந்தையும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னா் உறவினா் வீட்டு திருமண நிகழ்வுக்காக வெளியூா் சென்றுவிட்ட நிலையில், உடல்நலக்குறைவால் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தையைப் பாா்ப்பதற்காக, தமிழ்ச்செல்வியும் அவரது மகனும் வெள்ளிக்கிழமை சென்றுள்ளனா்.
சனிக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ கதவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த திருவாரூா் தாலுக்கா போலீஸாா், கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.