வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும். மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை (செப்.27) நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி மாவட்டத் தலைவா்கள் குணசேகரன் (ஏஐடியுசி), மாலதி (சிஐடியு), குருநாதன் (எல்பிஎப்), அம்பிகாபதி (ஐஎன்டியுசி) ஆகியோா் தலைமை வகித்தனா்.