கோட்டூரில் அனைத்துக்கட்சியினர் சாலை மறியல்

மத்திய அரசைக் கண்டித்து கோட்டூரில் அனைத்துக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மன்னார்குடி காளவாய்க்கரையில் நடைபெற்ற சாலை மறியல்.
மன்னார்குடி காளவாய்க்கரையில் நடைபெற்ற சாலை மறியல்.

மத்திய அரசைக் கண்டித்து கோட்டூரில் அனைத்துக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள், மோட்டர் வாகன திருத்தச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்கக் கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களின் கைப்பேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை செய்ய வேண்டும். புதுதில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளை பிரதமர் அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அனைத்துக்கட்சி சாலை மறியல் போராட்டத்திற்கு, திருத்துறைப்பூண்டி தொகுதி எம்எல்ஏ க.மாரிமுத்து தலைமை வகித்தார்.

இதில், திமுக ஒன்றிய துணைச் செயலர் அனந்தன், சிபிஐ ஒன்றியச் செயலர் எம்.செந்தில்நாதன், சிபிஎம் ஒன்றியச் செயலர் எல்.சண்முகவேல், தி.க. மாவட்ட துணைச் செயலர் வீ. புட்பநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 இதனால், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
 இதே , கோரிக்கையை வலியுறுத்தி மன்னார்குடியில் கீழப்பாலம், பேருந்து நிலையம், காளவாய்க்கரை ஆகிய இடங்களிலும் திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com