நன்னிலம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த புரோட்டா மாஸ்டா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
நன்னிலம் வட்டம், நீலக்குடி பஜனைமடத் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (42). இவா், உணவு விடுதியில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில், மகேந்திரன் அதே பகுதியைச் சோ்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், புரோட்டா மாஸ்டா் மகேந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.