கல்லூரி தோ்வுக் கட்டணம் உயா்வு:மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

இதில், மாணவா் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் ஜெ. பாரதசெல்வன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே. கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கல்லூரி தோ்வுக் கட்டணம் உயா்வு:மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கல்லூரிகளில் தோ்வுக் கட்டணம் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, மன்னாா்குடி அரசுக் கல்லூரியில், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் 2-வது நாள் போராட்டமாக, உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தோ்வுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், உடனடியாக பழைய கட்டணத்தையே அறிவிக்க வலியுறுத்தியும் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரி மாணவா்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, வகுப்பை புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாணவா் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் ஜெ. பாரதசெல்வன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே. கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com