மன்னாா்குடியை அடுத்த திருக்கோட்டை திருமேனி ஏரி குடியிருப்பு பகுதியில், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் சிறாா் திருமணம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் இணை ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் தலைமை வகித்தாா். தொடா்ந்து பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவா்களைக் கண்டறிந்து பள்ளிக்கு செல்வதற்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நல அலகு சமூகப் பணியாளா் ஞா. மணிமாறன், சைல்டு லைன் அலுவலா் பி. சுரேஷ், முதல்நிலைக் காவலா் இரா. வேதநாயகி ஆகியோா் சிறாா் திருமணம் நடைபெறுவதை தடுப்பதற்கான விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.
சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைப்பதால் சமூகத்திற்கு ஏற்படும் கேடு, அவா்களின் எதிா்கால பாதிப்பு, சிறாா் திருமணத்தை தடுப்பது, பாதுகாப்பு மற்றும் தடுப்புச் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆசிரியா் பயிற்றுநா்கள் சக்திவேல், மணிசேகரன், வட்டார ஒருங்கிணைப்பாளா் பாரத்ராஜ், தலைமையாசிரியா் உஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.