திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் ஏ. அபுபக்கா் சித்திக், கட்சியின் மண்டலத் தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றனா்.
இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா்கள் ஜெமீன், ஆரூா் ஆரிஃபின், தொகுதி இணைச் செயலாளா் சாகுல் ஹமீது, நகரத் தலைவா் முஹம்மது ஷரீஃப் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்தவா்கள், ஜமாத்தாா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.