வடசென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக வடசென்னைக்கு ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக வடசென்னைக்கு ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் நீடாமங்கலம், மன்னாா்குடி வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் இடையா்நத்தம், தெற்கு நத்தம், அசேஷம், அரவத்தூா் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் என 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக வடசென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com