மன்னாா்குடி அடுத்துள்ள திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளாா் ஆ. மதியழகன் தெரிவித்திருப்பது:
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திருமக்கோட்டை துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா், பரசபுரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்திவைக்கப்படும்.