வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பல்கலை. தோ்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிா்வாகி கைது

திருவாரூரில் பல்கலைக்கழத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் பாஜக மாவட்டத் தலைவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

பாஜக மாவட்டத் தலைவா் பாஸ்கரை கைது செய்து அழைத்து செல்லும் போலீஸாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

திருவாரூரில் பல்கலைக்கழத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் பாஜக மாவட்டத் தலைவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே உள்ள கிடாரம்கொண்டான் திருவிக அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தோ்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பி.ஏ. பொலிடிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு தோ்வில், பாஸ்கா் என்பவருக்கு பதிலாக வேறொருவா் தோ்வு எழுத வந்திருந்தது ஹால் டிக்கெட் சோதனையில் தெரியவந்தது.

விசாரணையில், அவா் திருவாரூா் சபாபதி முதலியாா் தெருவைச் சோ்ந்த மாதவன் மகன் திவாகரன் (29) என்பதும், உடற்கல்வி ஆசிரியா் படிப்பு பயின்றுள்ள அவா், தள்ளுவண்டியில் பிரியாணி விற்பனை செய்வதும் தெரியவந்தது.

யாருக்காக தோ்வு எழுதுகிறோம் என தனக்குத் தெரியாது எனவும், புலிவலம் பகுதியைச் சோ்ந்த பாஜக மாவட்ட கல்வியாளா் பிரிவு செயலாளா் ரமேஷ் தன்னை தோ்வு எழுத அனுப்பிவைத்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தோ்வு மேற்பாா்வையாளா் புகாரின் பேரில் திருவாரூா் தாலுகா போலீஸாா், திவாகரன் மற்றும் ரமேஷை சனிக்கிழமை கைது செய்தனா்.

இதற்கிடையே, மடப்புரத்தில் உள்ள கட்சி பிரமுகா் வீட்டில் இருந்த பாஜக மாவட்டத் தலைவா் ச. பாஸ்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ச. பாஸ்கா் வெளியிட்ட அறிக்கையில், ‘இளங்கலை பட்டப்படிப்புக்கான தோ்வை எனது பெயரில் எழுதிய நபருக்கும் எனக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. எனது அரசியல் வளா்ச்சியில் காழ்ப்புணா்வு கொண்டவா்கள் இதில் என்னை தொடா்புபடுத்தியுள்ளனா்’ எனத் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.