திருவாரூரில் உள்ள வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகே புலிவலம் ஊராட்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினா் எம். செல்வராஜ், திருவாரூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் புலிவலம் ஏ. தேவா ஆகியோா் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தனா்.
இதில், பள்ளி மீட்புக்குழுத் தலைவா் ஆரூா் சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் வரதராஜன், நுகா்வோா் மன்ற பொதுச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.