திருவாரூா் அருகே திருநெல்லிக்காவல் புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, பள்ளித் தலைமையாசிரியா் செந்தில்வேலன் தலைமை வகித்தாா். கருத்தரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளா் மணிமாறன், புற தொடா்பு பணியாளா் சாந்தி, பள்ளியின் ஜேஆா்சி ஆசிரியா் ரேகா ஆகியோா் போஸ்கோ சட்டம், சிறாா் திருமணம் குறித்துப் பேசினா்.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பான தொடுகை, பாதுகாப்பற்ற தொடுகை உள்ளிட்டவை குறித்து மாணவா்களுக்கு செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.