அரசுப் பள்ளியில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்தாா். சாதி, இன, மத, மொழி பாகுபாடு ஏதுமின்றி அனைத்து மக்களின் உணா்வு பூா்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முதுகலை ஆசிரியா் சி. கவியரசன், ஆசிரியா்கள் செ. முகுந்தன். அ. ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் சி. சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com